GIVE & RECEIVE FULL

Custom Search for Positive Anthony Muthu
Custom Search
Showing posts with label சுய முன்னேற்றம். Show all posts
Showing posts with label சுய முன்னேற்றம். Show all posts

Saturday, March 13, 2010

உங்கள் வரங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்..!

yv



ஆயினும்...
இன்றைய சூழலில் கடவுளே பூமிக்கு வருவதாயினும், இது போல ஜிகினா வேலை, தண்டோரா கூவல், அனைத்தும் செய்தாகத்தான் வேண்டும்.

எனவே அனைவரும் தயை கூர்ந்து என்னை மன்னித்தருளி.., "மேலே படத்தின் மேல் கிளிக்" செய்யுங்கள்.


"நன்றி: "

Button Comment

Monday, March 1, 2010

நிறைவேறிய பார்த்திபன் கனவு! கல்கியில் "பாஸிட்டிவ் அந்தோணி!"



ஆம்! இது வரையில் அது ஒரு பெருங்கானவாகவே இருந்தது.

இளம் பிராயத்தில் அப்பா சொன்ன பார்த்திபன் கனவு கதை கேட்டு.... பிந்நாளில் அதுவும் அதோடு "சிவகாமியின் சபதமும்" திரும்ப திரும்ப படித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

18 வயதில் எழுத்தாளக் கனவு எட்டிப் பார்த்த சமயம்.., முதல் முயற்சியான "அந்திமடல்" சிறுகதை தினமலரில் வெளிவந்தபோது அப்பாவிடம் சன்மானத் தொகையான 100 ரூபாயை பெருமை பொங்க கொடுத்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

எழுத்தாள அஸ்திவாரத்திற்காக "புதுமைப் பித்தன், கு. ப. ரா, தி. ஜானகிராமன், பிரபஞ்சன், ஜெயகாந்தன்" இன்னும் பல இலக்கிய மேதைகளின் படைப்புக்களை வெறி கொண்டு தேடித் தேடிப்.... படித்த காலங்களில் கல்கி எனும் மாமனிதரும்,
அதே பெயருடைய பத்திரிக்கையும் பிரும்மாண்டமாய் மனதுக்குள் எழுவார்கள்.

"கல்கி"பத்திரிகையில் என் எழுத்தா? ஹும்..! அதெல்லாம் அடுத்த பிறவியில்தான் என்ற நினைப்பில் விளையாட்டாய்க் கூட ஒரு படைப்பையும் அனுப்பியதில்லை.

யாருக்கு எப்படியோ...? என்னைப் பொறுத்த வரை "கல்கியில் என் படைப்பு என்பது ஒரு உன்னதக் கனவு."

அது நிறைவேறிய சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

இவ்வார தன்னம்பிக்கைச் சிறப்பிதழில் "காயங்களுக்கு நன்றி" என்று என் கட்டுரை.

இப்பவும் அப்பா எதிரில், ஷெல்ஃபில் புகைப்படத்துள் புன்னகைக்கிறார்.

"அப்பா..! கல்கியில உங்க பிள்ளை எழுதினது வந்திருக்குப்பா......"

சொல்லில் அடங்காததொரு சோழச் சோகம் கப்புகிறது.

பயணம் தொடர்கிறது.

Button Comment

Monday, February 22, 2010

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்

சமீபத்தில் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. எனவே.........


உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன.

பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன.

பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.



என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.


இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!



"நன்றி: http://groups.yahoo.com/group/Only-for-tamil/messages"

Button Comment

Tuesday, January 26, 2010

வீரம் எனப்படுவது யாதெனில்...

ஒரு தந்தை தன் மகனுக்கு வீரம் என்றால் என்ன? என்று விளக்கம் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

ஏதேதோ உதாரணம் சொல்லியும் மகனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

"என்னுடன் வா" என அழைத்துக் கொண்டு போனார்.

வெகுதூரம் சென்ற பின், ஓரிடத்தில் நிறுத்தி... சுற்றிலும் தரையை சுட்டிக் காட்டினார்.

ஏதோ தீ விபத்தினால் தரை முழுவதும் கருகிப் போயிருந்தது.

குனிந்து தரை முழுவதும் உன்னிப்பாய்த் தேடினார்.

திடீரென்று முகம் பிரகாசமானார்.

"மகனே! வா! என்ன பார்க்கிறாய்?"

"சுற்றிலும் கருகிய மொட்டாந்தரை!"

"பிறகு?"

"நடுவில்... முளைத்திருக்கும் ஒற்றைப் புல்! ஆ... அப்பா! புரிந்து விட்டது! இதுதான் வீரம்."

"சபாஷ்!"

==========================================================

ஆம்! இயல்பு நிலை முடக்கப் பட்டு, அங்கே எழும் போராட்டத்தின், தன் முனைப்பின், சுயம் அறிதலின்... விளைவுதான் வீரம்.

அந்த வகையில்...

பிறந்த 19 மாதங்களில்... கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தும்., வாழ்ந்து காட்டிய "ஹெலென் கெல்லர் (Click here)" ஒரு மாவீரர்.

ஹெலென் கெல்லர்


21 வயதில் நரம்புக் கோளாறினால் பாதிக்கப் பட்டும், கழுத்துக்குக் கீழ் செயலிழந்து, பேச்சிழந்த நிலையிலும், கடும் முயற்சியுடன் தொடர்ந்து படித்து, விஞ்ஞானியாகி, 'சர் ஐசக் நியூட்டன்' வகித்த பதவியை வகித்த விஞ்ஞானி "ஸ்டீவன் ஹாக்கின்ஸ் (Click here)" ஒரு மாவீரர்.

ஸ்டீவன் ஹாக்கின்ஸ்

கைகளை இழந்தாலும், வாயினால் வரைந்து சாதிக்கும் ஓவியர்.. "ஜனா (Click here)"-வும்,
ஜனா

கால்களால் வரையும் "நரசிம்மலு-வும் (Click here)" மாவீரர்கள்.

நரசிம்மலு

இன்னும் நம்மைச் சுற்றிலும், எத்தனை எத்தனையோ மாவீரர்கள்... அறியப்படாமல், சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் இந்த நாளில் நம் வீரவணக்கத்தையும், மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.

==========================================================

தயவு செய்து இவர்களுடன் என்னை, யாரும் ஒப்பிட வேண்டாம்.

நிஜத்தில் நான் இவர்களின் மிச்சத்தின் எச்சத்துடன் கூட ஒப்பிடப்படத் தகுதியற்றவன்.

என் ஓட்டம், எலியை பூனை துரத்தும்போது எலி ஓடும் ஓட்டம்.

இதையும் ஒரு ஓட்டப்பந்தய வீரனின் ஓட்டத்தையும் ஒப்பிடுவது மாபெரும் தவறு.

திறமையினாலும் இடைவிடாத பயிற்சியினாலும் சாதித்தவர்கள் இவர்கள்.

இவர்கள் முன்பு நானொரு வெற்றுப் பிம்பம்.

==========================================================

சமீபமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது.

கடும் ஆஸ்துமா மூச்சுத் திணறலில், 15 நாட்கள் படுத்த படுக்கையாகி, இடையில் சில நாட்கள் கொஞ்சம் சரியாகி..., இப்போது மீண்டும் கடுமையாகி படுக்க வைத்துவிட்டது.

தூக்கம் வராத நிலையில், மிகுந்த சிரமத்துடன், ஏதோ அரை மயக்க நிலையில் தட்டச்சிக் கொண்டு....

தட்டுத் தடுமாறி... வாழ்வில் இன்னும் கொஞ்ச தூரம் போக நினைக்கிறேன்.

உடலார் ஒத்துழைப்பாரா........?

தெரியவில்லை?
==========================================================

வீரர்கள் என்றால் இவர்கள் மட்டுமல்ல.
வாழ்வின் அடிமட்டத்திலிருந்து,
வறுமையின் கொடுமையிலிருந்தாலும், இடைவிடாத போராட்டங்களுக்கிடையே இன்று உயர்ந்து நிற்கும் நமது முதல்வர் கருணாநிதி, என் முதலாளி மதுரா ட்ராவல்ஸ் அதிபர், "கலைமாமணி வி. கே. டி. பாலன் (Click here)", அன்பான அப்துல் கலாம் மாமா .... இன்னும்... இன்னும்... இந்தப்பட்டியல் முடிவடையவில்லை.

உங்கள் இப்போதைய நிலை எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.

மனம் வைத்தால் நீங்களும் மாவீரராகலாம்.

Comment

Monday, November 16, 2009

கசுமறஙருமகலிமசுரகரவரகுலிடதா


உன் சொஸ்தப் படுத்தப்படாத
காயங்களுக்கு என்னிடம்...
மருந்து தீர்ந்து கொண்டே வருகிறது.

இருப்பினும்...
உனக்கான என் பாடலை...
பாடியபடி...
முயற்சி செய்து கொண்டுதான் வருகிறேன்.

மேலும் கொடுக்க.

என் கண்ணீரை..!

Sunday, November 1, 2009

வித்தியாசமான வீடியோ...!



வீடியோ பாத்து முடிச்சுட்டீங்களா?

முடிவில் எதிர்பாராத 'O'Henry twist அற்புதம்.

இது குறித்து என் மன நிலையை மேலே இந்த வலைப்பூ தலைப்புக்கு அடுத்தபடியான "விளக்கத்தில்" எழுதியுள்ளேன். (Description of this Blog)

கீழே படம் பாருங்கள் புரியும்.


ஆம்..!
புறநானூற்றில் எனக்கு மிகப் பிடித்த வரிகள் அவை.

"ஈயென இரத்தல் இழிந்தன்று- அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று"

"கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று- அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உய்ர்ந்தன்று!"

இந்த வரிகளுக்கு விஷுவல் பொழிப்புரை எழுதிய இந்தக் குறும்படமெடுத்தவருக்கு ஆயிரம் கோடி பாராட்டுக்கள்.

இங்கே....!

மிக நேர்மையுடன் என் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதுதான் நியாயத்திலும் மிகுந்த நியாயம்.

ஆம்..!
ஈயென இறந்திருக்கிறேன்.
ஈயேன் என இழிந்திருக்கிறேன்.


கொள்ளெனக் கொடுத்திருக்கிறேன்.
கொள்ளேன் என மறுத்திருக்கிறேன்.

"இறந்ததையும் இழிந்ததையும்" நினைக்கையில் வெறுமனே கையாலாகாத அழுகையும், மனம் முழுக்க வலியும் வேதனையும் மட்டுமே மிஞ்சுகிறது.

"இங்கே "என் இனிய கர்ணா-வில் நான் எழுதியுள்ளதைப் போல்""

இப்படித்தான் சொல்லி என்னைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

"என் இல்லாமையும், இயலாமையும்...
மட்டும் எனக்கு ஏற்படாமல் போயிருந்தால்..,.
இந்தக் காயங்களும் எனக்கு இல்லாமல் போயிருக்கும்."

என்னை நானே திரும்பிப் பார்த்துக் கொள்ள வைத்த வீடியோ! :-)


"வீடியோ கண்ட இடத்துக்கு நன்றி: "

பி. கு. 2: இப்போது முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ள, அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகி மென்பொருளுக்கு"இங்கே சொடுக்கவும்..."

Sunday, October 4, 2009

தோண்டப்பட்ட சிறுவயல்...!

அப்போது நீ..., வயல்களுக்கு நடுவில் சிறு வயலாக வாழ்ந்திருந்தாய்.

உன்னைச் சுற்றியுள்ள பெருவயல்கள் உன்னை மதிக்காத போதும், அவற்றோடு கதைப்பதில் உனக்கு மிக ஆனந்தம்.

ஒரு நாள் வயல்களின் சொந்தக்காரர் சில ஆட்களுடன் வந்தார்.

மிகச் சரியாக உன்னைத் தேர்ந்தெடுத்து உன்னில் பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர்.

உனக்கோ மகா துக்கம்.

உயிர் போகும் வலி.

பக்கத்துப் பெருவயல்கள், தமக்குள் பேசிக்கொண்டும், புன்னகைத்துக்கொண்டுமிருந்தன.

உன் உடலைக் குத்திக் கிழித்தபடி, காயத்தை ஆழமாக்கிக் கொண்டே, உனக்கு மிக வலியைத் தந்தார்கள் ஆட்கள்.

நீயோ கடைசி முயற்சியாக இறைவனை நோக்கி முறையிட்டாய்.

இறைவா...! என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏனிந்த நிலை? கதறினாய்.

கடவுள் சொன்னார்.

"சற்று பொறு..!"

உன் துக்கமும் துயரமும் அதிகமாகி வலியில் நீ பீறிட்டு அழத் துவங்கினாய்.

அற்புதம் நிகழ்ந்தது.

-----------------------------------------------------------------------------------------------------------------

சில நாள் கழித்து இறைவன் உன்னோடு பேசினார்.

"இப்போது எப்படி இருக்கிறாய்?"

"சந்தோஷமாயிருக்கிறேன்.
என்னைச் சுற்றி உள்ள வயல்கள் இப்போது என்றும் பசுமையாய் செழிக்கின்றன.
என்னைச் சுற்றிலும் சோலைகள்.
நான் கொடுத்து வைத்த பிறவி.
இப்போது நான் பழைய சிறுவயல் அல்ல.
ஆழ்கிணறு!
என்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் செழிக்க...
நான் துன்பப்பட்டது எனக்குக் கிடைத்த மாவரம்."

கடவுள் புன்னகைத்தார்!

இப்போதும் நீ அழுது கொண்டிருக்கிறாய்!

ஆனந்தத்தில்.

ஆனந்த அழுகையின் பிரவாகத்தில் சுற்றிலும் சந்தோஷமும் நம்பிக்கையும் விளைந்து கொண்டே போகிறது.

இது நிரந்தரம்.

Sunday, September 20, 2009

அதிர்வு..!



அந்த ரயில் பெட்டியில் உன்னைத்தவிர நிறைய பேர்.

நெருக்கியடித்தபடி, நின்று கொண்டும், சீட் நுனிகளில் ஒட்டிக் கொண்டும்...

ஹும்..! இம்முறையும்...
வழக்கமான புளிமூட்டைப் பயணம்தான்.

அமர்ந்திருந்த அதிர்ஷ்டசாலிகளில் ஜன்னலோரம் இருந்த ஓரு 30 வயது போன்ற மகனும், அவனது வயதானத் தந்தையும்...

சூழலுக்கும், உனக்கும், பிறருக்கும் எரிச்சலூட்டிக் கொண்டிருந்தார்கள்.

காரணம் அந்த மகனுடைய சிறுபிள்ளைத்தனப் பேத்த்ல்களாய் இருக்கலாம்.

வெகு நேரமாய் ஒரு சின்னஞ்சிறு பாலகனைப் போல ஜன்னல்வழியே காணாது கண்ட காட்சிகளைப் பார்த்தவனாய் பிதற்றிக் கொண்டிருந்தான்.

"அப்பா! அப்பா! அங்கே பாரேன்..! எவ்ளோ பச்சைப் பச்சையா... மரம்.., செடிகொடி.., மலை... எல்லாமே... எவ்ளோ வேகமா பின்னால ஓடுது பாரேன்."

உனக்கு வந்தக் கோபத்தை அடக்கிக் கொண்டாய்.

ஆளைப் பார்த்தால் 30 வயசு. பேச்சென்னவோ 5 வயசு. ஒருவேளை மூளை கலங்கியவனோ? பைத்தியமோ?

உன்னைப் போலவே.., அங்கிருந்த இன்னும் சிலரும் சற்று ஜாக்கிரதையாய் இருக்க வேணுமென்று எண்ணியிருக்கலாம்.

திடீரென்று...
சடசடவென்று மழை பிடித்துக் கொண்டது.

திறந்திருந்த ஜன்னல் வழியே...
உள்ளிருக்கும் அத்தனைப் பயணிகள் மேலும்...
மழை புளிச் புளிச்சென்று வயதான கிழவி வெற்றிலை எச்சில் துப்புவதைப் போல சாரலடித்தது.

அந்த மகனுக்கு சந்தோஷம் பீறியது.

"அப்பா... அப்பா..! மழை பெய்யற அழகைப் பாரேன். அற்புதமாயில்ல..?"

உனக்கோ உன் புது உடை நாசமாகும் ஆத்திரம்.

உன் சார்பாக இன்னொருவர் கத்தினார்.

"ஏன்யா கெழவா..! உன் பையனுக்கு புத்தி சுவாதீனமில்லைன்னா, எங்கயாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போ..! அதுக்கு ஏன் இப்படி ஓடற ரயில்ல கூட்டிட்டு வந்து எங்களைக் கழுத்தறுக்கற...
அய்ங்"

அந்த வயதான தந்தை சற்றே தயக்கத்துடன், கசிந்த கண்களுடன் கையெடுத்துக் கும்பிட்டபடி தழதழத்த குரலில் பதிலளித்தார்ர்.

"சிரமத்துக்கு மன்னிச்சுடுங்கோ..!, நாங்க ஆஸ்பத்திரில இருந்துதான் வரோம். என் பையன் காலைலதான் டிஸ்சார்ஜ் ஆனான்.
அவனுக்குப் பிறவியிலயே கண்ணு தெரியாமப் போயி..,
36 வருஷத்துக்கப்புறம் போன வாரம்தான்.., பார்வை கிடைச்சுது.
இந்த இயற்கையும்..., மழையும்.., அவனுக்குப் புதுசு."

----------------------------------------------------------------

வருத்தமுடன் ஒரு குறிப்பு:
சில சமயம் நமது செயல்கள் நமது பார்வையில் முற்றிலும் சரியானவையாகத் தோன்றலாம். ஆனால்.................

உண்மை தெரிய வரும்போது... நமது செயல் நம்மையே கன்னத்திலறைந்து கொள்வதற்குப் போதுமான வலியை உருவாக்கலாம்.

எனவே...
கடுமையாய் நடந்து கொள்ளுமுன்...
பிரச்சினையின் உண்மைத்தன்மையை முழுமையாய் அறிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

சந்தோஷமுடன் ஒரு சிறு குறிப்பு:
இணையத்தில் நுழைந்த பின்பான என் (!!!) முதல் சிறு(!)கதை :-)

கதைக்கான கருவும், களமும் " இங்கிருந்து"சுடப்பட்டது. என் விருப்பம் போல கதை சொல்லும் பாணியை மாற்றியிருக்கிறேன். ஒப்பிட்டு கருத்து சொல்லவும்.

Friday, September 18, 2009

வலைப்பதிவர்-திரைப்பட உதவி இயக்குனர் தாயுமானவன் - அஞ்சலி



எனக்கும் இன்னும் பலருக்கும் நம்பிக்கை ஊட்டி வந்த ஒரு பெருங்கனவு இன்று முற்பகல் 11:50 மணியளவில் மரித்துப் போனது.

கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அண்ணன் தாயுமானவன், நோயின் பிடியிலிருந்தும், உலகின் பிடியிலிருந்தும் முழுமையாக விடுபட்டார்.

அன்னாருக்கு நம் கண்களின் அருவியினூடாக இதய அஞ்சலி.

"தாயுமானவன் அண்ணனின் வலைப்பூ "

அண்ணா...
போய்வாருங்கள்...
இன்று நீங்கள்...
நாளை நான்..!

Friday, September 11, 2009

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!



உங்களால் எதையும் சாதிக்க முடியும். எதை விரும்பினாலும் அதை அடைய முடியும். நினைத்ததை நடத்திக் காட்டும் வல்லமை உங்களுக்கு உண்டு.

இது முன்பே உங்களுக்குத் தெரிந்த விடயம்தானே!

ஆனாலும் அப்பப்ப மறந்து போய் விடுகிறது.
அடிக்கடி யாராவது இந்த விஷயத்தை நினைவூட்டிக் கொண்டே இருந்தால் எவ்வளவு நலமாய் இருக்கும்.

ஏனென்றால் சகல வல்லமை பொருந்திய அனுமனுக்கே (ஆஞ்சநேயர்) கூட அவருடைய சக்தி அடிக்கடி மறந்து போகுமாம்.

(சிறு வயது வால்தனத்தால்...(!!!) பெற்ற சாபம்)

யாராவது அருகில் இருந்து அவருக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்களாம். (ஜாம்பவானுடைய முக்கிய வேலைகளில் இதுவும் ஒன்றாம்.) ]

ஜாம்பவானுக்கு பதில் உங்களுக்கு நினைவூட்ட உங்கள் செல்போன் இருக்கிறதே.

அது ஒவ்வொரு முறையும் உங்களுக்குக் கால் வரும்போதெல்லாம், கத்தி சத்தம் போட்டு உங்களுக்கு நினைவூட்டும்.

எப்படி என்கிறீர்களா???

"இதோ இங்கே க்ளிக் செய்து"
இந்த Zip ஃபைலை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

அதை UNZIP செய்தால்....
அதனுள் உங்க்ள் வெற்றிக்கான மொத்தம் 15 வகையான ரிங்க் டோன்-கள் இதில் உண்டு.

உங்கள் மொபைல் போனின் மெமரி கார்டிற்கு இதை ஏற்றிக்கொண்டு தேவையானதை உங்கள் ரிங் டோனாக செலக்ட் செய்யுங்கள்.

அவ்ளொவ் தான்.

இனி உங்கள் செல்ஃபோன் உங்களுக்கு நினைவூட்டத் தொடங்கி விடும்.

ஒரு சாம்பிளுக்கு கீழேயுள்ள ப்ளேயரின் ப்ளே ப்ட்டனை க்ளிக் செய்து "அலாவுதீனின் அற்புத விளக்கு பூதம்" சொல்வதைக் கேளுங்கள்
Get this widget | Track details | eSnips Social DNA


லேட்டஸ்ட் நியூஸ்: இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஆஞ்சநேயர் கூட புதுசா மொபைல்ஃபோன் வாங்கிட்டு, இந்த ரிங் டோன்களை டவுன்லோடு செய்து கொண்டிருப்பதாக கேள்வி....!!!!!!!! :-)

பின் குறிப்பு. = பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.

"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)" நன்றி..! நன்றி..! நன்றி..!"

Monday, September 7, 2009

வெற்றி வெகுதூரமில்லை..!



வா நண்பனே!
வா..! வா..!
புறப்படுவோம் புதிய சொர்க்கம் நோக்கி!

சுயத்தை அலசி...
சோகம்...
சோம்பல் அகற்றி...
வெற்றுச் சுயபரிதாபம்...
வேரோடு களைந்து...

இன்னது... இதுதான் என் தேவை...
எனும் தெளிதல்... புரிதலோடு...

அர்ச்சுனன் கண் பார்த்த...
மீன்... மீனின் தலை...
எனும் தீர்க்க நோக்கோடு...

நமது சொர்க்கத்தின் வரைபடம்...
புகைப்படங்களை...
நொடிக்கொருதரம்...
சரிபார்த்தபடி...

வா நண்பனே!
புறப்படுவோம் புதிய சொர்க்கம் நோக்கி!

வழியில்...
பாம்பு.. வரலாம்...
புலி வரலாம்...
பசப்பவும் சிலபேர் வரலாம்..!

தூவென்று உமிழ்ந்து..
போவென்றப்பால் விரட்டி...

நெஞ்சிலுறுதியுடன்...
நேர்மைத் திறம் கொண்டு...

வா நண்பனே!
வா..! வா..!
புறப்படுவோம் புதிய சொர்க்கம் நோக்கி!

துணிந்து ஒரு அடி...
ஒரே ஒரு அடி...
முன்வைத்து விட்டாயா...?

இனி...
வெற்றி வெகுதூரமில்லை..!


பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.

பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.

"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"

Sunday, September 6, 2009

3 நிமிட அதிர்ச்சி வீடியோ..!

இந்த வீடியோவில் இருக்கும் நபர் யாரென்று உங்களுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? என்ன?

அதிர்ச்சி அதுவல்ல?

வீடியோவில் வரும் வார்த்தைகளைச் சொல்ல இந்த நபருக்குத் தகுதி இருக்கிறதா? உரிமை இருக்கிறதா...?

என்பதுதான் கேள்வி?

முடிவை உங்களிடமே கையளிக்கிறேன்.

நீங்கள் தீர்ப்பளியுங்கள்.



"வீடியோவை உங்கள் கணினிக்கு டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்."

"வீடியோவை உங்கள் மொபைல் போனில் பார்க்கும் விதமாக, டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்."

பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமிட்டால் மகிழ்வேன்.

பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.

"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"

Saturday, September 5, 2009

கடவுளின் நவீன குழந்தை நாடோடிகள்அபிநயா..! (வீடியோ)



இந்த்க் குழந்தைக்கு காது கேட்காது. வாய் பேச வராது.
இருப்பினும்...
சாதித்திருக்கிறது.

நாடோடிகள் படத்தில் ஹீரோவுக்கு தங்கை வேடத்தில் அசத்தியிருக்கிறார்.




படத்தில் பார்த்தால் இவருக்கு வாய்பேச வராது என்பதாக யாராவது சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டீர்கள்.

இயக்குனர் சமுத்திரக்கனிக்கும், நடிகர், இயக்குனர் சசி-க்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

"மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்...."

இந்தக் கடவுளின் குழந்தை மேன்மேலும் உயர்ந்து, புகழுச்சியை அடைந்து, விருதுகள் பலபெற்று வாழ்வாங்கு வாழ, மனம் உருகி...
ஒரு வினாடி பிரார்த்தனை செய்து,
உளமார வாழ்த்துவோம்.



பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.

பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.

"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"

Saturday, August 29, 2009

இதைச் செய்வதால் கிடைக்கும் கிக் இருக்கே...

படங்களைப் பாருங்கள்.

நான் சொல்லும் கிக் (மகிழ்ச்சி)என்னன்னு உங்களுக்கே புரியும்.







துன்பத்தில் இருக்கும் ஜீவன்களுக்கு உதவுவதில் கிடைக்கும் சந்தோஷம் இருக்கே...?

அனுபவித்தவர்களால் மட்டுமே அது உணரப்படும்.

இதை அனுபவித்த பல ஆத்மாக்களை நான் அறிவேன்.

வேறென்ன சொல்ல..?


"நன்றி: "

பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.

பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.

"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"

Friday, July 31, 2009

இன்றாவது... முடியும்..!



சமீபத்தில் என் செல்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

"விடியும் என்ற நம்பிக்கையில் உறங்கச் செல்லும் நீ...
முடியும் என்ற நம்பிக்கையில் எழு!
வெற்றி உன் காலடியில் மலரும்."

ஆம்..!
முடியும் என்ற நம்பிக்கையில்தான்...
தினமும் எழுகிறேன்.

இன்றாவது...
இன்றாவது...
இன்றாவது...

என் வாழ்வின்...
இருள் முடியும்...

துன்பம் முடியும்...

வேதனைத் துயர் முடியும்...

என்கிற நம்பிக்கையில்தான்...
எழுகிறேன்.

(அனுப்பிய அன்புள்ளத்திற்கு நன்றிகள்)


"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"

Wednesday, June 10, 2009

அப்துல் கலாமும், அந்தோணி முத்து- வும்



அப்துல் கலாம் எனும் இமய மலையோடு, அந்தோணி முத்து எனும் சிறு கூழாங்கல்... பல சமயம் கற்பனையில் மானசீகமாக பேசி ஆறுதலடைந்திருக்கிறது.
பல சமயம் இந்த Fantasy-யில் மூழ்கி என் கவலைகளை மூழ்கடித்திருக்கிறேன்.



அவரை என் தாய் மாமாவாக நினைத்து அளவளாவுவேன்.
(எனக்குத் தெரிந்து பிள்ளைகள் மேல் பெற்றவர்களுக்கு அடுத்தபடியாக, தாய் மாமாக்கள்தான் அதிக அன்பு செலுத்துவதாய் நம்புகிறேன்.)

சில சமயம் அப்துல் கலாமுடன், சில சமயம் புராண கால கர்ணனுடன். (கர்ணன் என் நண்பனாக்கும்.)

அப்படிப்பட்ட Fantasy- க்களில் சமீபமாய் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியது இது.

-------------------------------------------
"என்ன நீள மூக்குப் பையா?? என்ன ஆழ்ந்த சிந்தனை?

(அப்படி அழைப்பது எனக்கு மிகப் பிடிக்குமென்று அவருக்குத் தெரியும்)

"ம்ம்ம்... வாங்க மாமா! வாங்க..! அந்த முக்காலிய எடுத்துப் போட்டு உக்காருங்க"

"உக்காந்தாச்சு..! சொல்லு!"

"என்ன?"

"அதான் என்ன ஆழ்ந்த சிந்தனைன்னு கேட்டேனே..?"

"மாமா.!"

"சொல்லு பையா!"

"கனவு காணுங்கள் - ன்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே..?"

ஆமாம்..! அது ஒரு மிகச் சக்தி மிக்க ஒரு வாக்கியம்.
இன்றைக்கு சாதித்திருப்பவர்களின் சாதனைகள் எல்லாமே, அவர்கள் வாழ்வில், அது குறித்து தெரிந்தோ தெரியாமலோ கனவு கண்டவைதாம். கற்பனை செய்தவைதாம்..!
நான் சொல்லும் கனவு தூக்கத்தில் நீ காண்பது பற்றி அல்ல.
உன்னைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருக்கும் உன் எதிர்காலம் குறித்த கனவு. சொல்லு!

"அது போலவே, என் கனவுகளும் நிகழுமா மாமா..?"

"உதை படப் போகிறாய். நேர்மறை சிந்தனைகளின் கிரியா ஊக்கி, பாஸிட்டிவ் அந்தோணி முத்து- ன்னுல்லாம் பேர் வச்சிட்டு, உனக்குப் போய் இப்படிப்பட்ட சந்தேகங்கள் வரலாமா பையா? என்னாச்சு உனக்கு..?"

"மன்னிச்சுடுங்க மாமா..? சாதாரண மனிதப் பிறவிகளுக்கே உரிய மனத்திண்மையின் பலவீனம் எனக்கும் உண்டு மாமா.!"

"சந்தேகப்படாதே..! உன் கனவின் வலிமை குறித்து துளியும் சந்தேகம் வேண்டாம்! நம்பு..! உன் கனவின் வலிமையை பூரணமாய் நம்பு.
உன் கனவின் மீதான உன் விருப்பத்தையும், தேவையயும் பொறுத்து...
உன் கனவின் ஆழத்தைப் பொறுத்து, கனவை மனதிற்குள் ரிப்பீட் செய்வதைப் பொறுத்து.... விரைவாகவோ (அ) மெதுவாகவோ, ஆனால் சர்வ நிச்சயமாக உன் கனவு நிகழ்ந்தே தீரும்."

"ரொம்ப நன்றி மாமா..!"

"ஆமாம். என்ன நீயும் என்னை மாதிரியே ஹேர் ஸ்டைல் வச்சிருக்க. ரொம்பத்தான் காப்பியடிக்கறே..! சரி. முறைக்காதே..! உன் கனவுகளைப் பற்றிச் சொல்லேன் கேட்போம்..!"

---------------------------------

(அடுத்த பதிவில் அந்தோணி முத்து-வின் கனவுகளைப் பற்றி பேசலாமா..?)

----------------------------------


"நன்றி: "

பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.

பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.

"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"

Monday, June 8, 2009

இன்னொரு ரகசிய வீடியோ...!




பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.

பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.

"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"

Monday, May 25, 2009

இந்த ரகசியச் சேவையைப் பற்றி தெரியுமா பாஸ்..!

நிசமாவே இந்த ரகசியச் சேவை ரொம்ப நாளா நடந்துட்டு வருது பாஸ்..!

இதைச் செய்து வருபவருடைய முன் அனுமதி இல்லாமலே... அதைப்பற்றி எழுத முடிவு பண்ணிட்டேன்.


முதல்ல இந்தக் கதையைப் படிங்க..!
----------------------------------------------------




ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார்.

கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார்.

அவன் வெளியே வர முயற்சி செய்தான்.

ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார்.

சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான்.

சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார்.

அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான்.

சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார்.

இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை.

“ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும்.

ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தர முடியாதோ, அது போல ஒரு பலவீனமான ஆசையால் மிகப்பெரிய வெற்றியை உருவாக்க முடியாது”.


--------------------------------------


கதை எப்பிடி..?

சூப்பருல்லா..? :-)

இது மாதிரி தினமும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் தகவல் உங்கள் மின்னஞ்சலுக்கு வரணுமா?

இந்த ரகசியச் சேவையைத்தான் நம்ம சகோதரர் "கொல்லி ம‌லை சார‌ல் பொ. ஆனந்த் பிர‌சாத்" அவர்கள் ரொம்ப நாளா செஞ்சிட்டு வராரு.

குறிப்பு: நீங்களோ (அ) உங்கள் நண்பர்கள் எவரேனுமோ இந்த சேவையைய் பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை இவருக்கு தெரியப்படுத்தவும் ananthprasath@drcet.org

"இங்க க்ளிக் பண்ணி, அவரோட வலைப்பூவுக்கு ஒரு விசிட் அடிங்க"

பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.

பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிலிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.


"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"

Sunday, May 24, 2009

LOA- ன்னா என்னன்னு தெரியுமா பாஸ்?



இப்போ மேலை நாடுகளில் சுய முன்னேற்ற இயக்கங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை... L. O. A. (Law of Attraction.)

அதாவது "ஆகர்ஷண விதி" (நியூட்டனின் 3- ஆம் விதி போல)

நீங்கள் உங்கள் மனதில் எதை திரும்பத் திரும்ப எண்ணுகிறீர்களோ..!
கற்பனை செய்கிறீர்களோ..! காட்சியாக காணுகிறீர்களோ..!

அதை நீங்கள் ஆகர்ஷிக்கிறீர்கள். கவர்ந்திழுக்கிறீர்கள்..!

நம்மைச் சூழ்ந்திருக்கும் பிரபஞ்ச மகாசக்தி நமது எண்ணக் காட்சிகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது. வரமளிக்கிறது.

இப்போது நாம் இருக்கும் நிலைக்கு நாம் மட்டுமே பொறுப்பு.

இந்த நிலையை நாம்தான் நமது எண்ணங்களால் உருவாக்கினோம்.

துன்பத்திலிருக்கும் ஒரு ஏழையின் மனம், தன் ஏழ்மை போகாதா...? என ஏங்குகிறது. கவனியுங்கள்...! அங்கேயும்... அவன் முதலில் தன் ஏழ்மையைக் குறித்த நினைவை கொண்டு வந்துவிட்டு, பிறகுதான் இது போகாதா..? என எண்ணுகிறான்.

இந்த நிலையில் அவன் மனம் மேலும் ஏழ்மையைத்தான் ஆகர்ஷிக்கும்.

ஒரு பணக்காரனை எடுத்துக் கொள்வோம்.

அவன் தன்னிடமிருக்கும் பணத்தை எப்படிப் பெருக்கலாம், அதை வைத்து என்னென்ன காரியங்கள் (அது நல்லதோ கெட்டதோ..?) செய்யலாம்...? என எண்ணுகிறான். அவன் சிந்தனை முழுவதும் பணம் நிறைந்திருப்பதால், அவன் மேலும் பணத்தையே ஆகர்ஷிக்கிறான்.


மனித மனத்தின் இயற்கை.., தான் இருக்கும் சூழ்நிலையையே அதிகமாக உள்வாங்கிக் கொள்கிறது.

எதை உள்வாங்குகிறதோ... அதையே... திரும்பத் திரும்ப எண்ணுகிறது. ஆகர்ஷிக்கிறது.

இவைதான் ஒரு ஏழை எப்போதுமே ஏழையாக இருப்பதற்கும், பணக்காரன் மேலும் பணக்காரனாகிக் கொண்டே போவதற்கும் அடிப்படை காரணங்கள்.

ஆகவே... வேண்டாத எதிர்மறை எண்ணங்களை முறியடிப்போம்.

இப்போது உங்களுக்கு இப்போது எது தேவையோ அதை மட்டுமே எண்ணுங்கள். மனதில் காட்சியாக காணுங்கள். ஆகர்ஷியுங்கள். கவர்ந்திழுங்கள்.

வெகு விரைவில் அது நிகழும். கிடைக்கும்.

ஆம்..! உங்கள் மனம் ஒரு அலாவுதீனின் அற்புத விளக்கு.
அதனுள் இருக்கும் பூதம்... நம்மைச் சுற்றி நீக்கமற நிறைந்திருக்கும், பிரபஞ்ச மகாசக்தி.

பூதத்திடம் நீங்கள்... "வாழ வை என்றால்" வாழ வைக்கும்.

"வாய வை என்றால்" கண்டிப்பாய் வாயை வைத்துவிடும். :-)

வாழ வைக்கணுமா...? (அ) வாய வைக்கணுமாங்கறதை நீங்கதான் முடிவு பண்ணனும். :-)

நீங்கள் அற்புதங்களை நிகழ்த்தப் பிறந்திருக்கிறீர்கள்.

உங்களுக்கு ஒரு சின்ன ஹோம் ஒர்க்.
கூகுள் ஆண்டவரிடம் Law of Attraction என்று கேட்டுப் பாருங்கள்.
வரும் முடிவுகளில் முதல் 5 முடிவுகளை சற்று கவனமாகப் படித்துப் பாருங்கள்.


"நன்றி: "

பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.

பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிலிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.

Friday, May 22, 2009

ஒரு பறவை சொன்ன 2 வரி ரகசியம்..!



ஆடுகின்ற கிளையின் மேல்...
அஞ்சாமல் அமர்ந்திருந்த பறவை சொன்னது...

"நான் நம்பியிருப்பது என் சிறகுகளை...!
ஆடுகின்ற இந்தக் கிளையை அல்ல...!"


--------------------------------------
பி. கு. 1: பின்னூட்டம் போடவும்

பி. கு. 2: அழகுத் தமிழைத் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!

Infolinks In Text Ads

LinkWithin

Related Posts with Thumbnails

Karnaa Full Video

Title:கர்ணன் karnan (திரைப்படம்) (Tamil film...

Desc:

Download here

எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....

A Letter to God...!



Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,

"1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.

I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.