GIVE & RECEIVE FULL

Custom Search for Positive Anthony Muthu
Custom Search

Monday, September 8, 2008

நான் நடக்கத் தொடங்கியிருக்கிறேன்..



எனக்குக்
கால்கள் முளைத்தன....
சக்கரமென்னும்
விரல்களுடன்.....

தெரிந்த பத்து முகங்கள்
தவிர பலப்பல
முகங்களின்
தரிசனம்......
தினமும்......

எனக்கே எனக்கான
வெயிலுடன்
மழையுடன்
காற்றுடன்,
பூக்களுடன்..,
செடி, கொடி... மரங்களுடனும்...
என்னை நானே
அறிமுகப் படுத்திக்
கொண்டேன்.....

இருபத்தைந்து
வருடங்களுக்குப் பிறகு
வண்ணத்துப் பூச்சியுடன்
சினேகம்.......

ஓ.....வாழ்க்கை
இவ்வளவு அழகானதா?

இப்புதிய சக்கரங்கள்
கற்பித்த அற்புதங்களை
அனுபவிக்க வித்திட்ட
அத்தனை
அன்புள்ளங்களையும்

கண்ணீர்ப் பளபளக்கும்...
விழிகளுடன்...
பெருமை பொங்க... நோக்கி...

எவரெஸ்ட் உச்சி மீதேறி நின்று.....
"நான் சந்தோஷமா இருக்கேன்"
எனக்கூவ ஆவல்.........

சொற்களைத் தேடியலைந்து
தோற்றுப் போயின
என் உணர்வுகள்.....

வெறும் நன்றி
சொல்லித் தப்பிக்கப்
போவதில்லை.....

கரம் கூப்பி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன்........

ஒரே நாளில்
பதினோரு வயதுக்
குழந்தையாய் மறுபடி பிறந்தேன்.....

மீண்டும் வாழ்கிறேன்
பதினோரு வயதிலிருந்து ஆரம்பித்து.........

ஆம்...

நான் நடக்கத் தொடங்கியிருக்கிறேன்.

இல்லையில்லை..!

சிறகு விரித்துப் பறக்கத் துவங்கியிருக்கிறேன்...!



[Valid Atom 1.0]

10 comments:

புதுகை.அப்துல்லா said...

கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.
:)

Viswanathan B said...

உன் மகிழ்ச்சி என்றும் என்றும் என்றும் என் மகிழ்ச்சி அன்றோ!

அண்டத்தின் விளிம்பையே தொட்டு வா!

- அண்ணன்

M.Rishan Shareef said...

உங்கள் கவிதையைக் கண்டுமிகவும் மகிழ்கிறேன் நண்பரே.
சிறகுகள் முளைத்திருக்கின்றன.
இனி வானத்தின் எல்லையை , வாழ்வின் வசீகர வண்ணங்களையெல்லாம் அழகிய விழிகளால் ரசித்துவரலாம்.

உங்கள் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வாழ்த்துக்கள் நண்பரே :)

Aruna said...

//ஒரே நாளில்
பதினோரு வயதுக்
குழந்தையாய் மறுபடி பிறந்தேன்.....//

இனிய மீள்பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

//எவரெஸ்ட் உச்சி மீதேறி நின்று.....
"நான் சந்தோஷமா இருக்கேன்"
எனக்கூவ ஆவல்.........//

வேறென்ன வேண்டும்? கேட்க மிகச் சந்தோஷமாக இருக்கிறது..
அன்புடன் அருணா

ஜோசப் பால்ராஜ் said...

ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா.
வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

//எனக்கே எனக்கான
வெயிலுடன்
மழையுடன்
காற்றுடன்,
பூக்களுடன்..,
செடி, கொடி... மரங்களுடனும்...
என்னை நானே
அறிமுகப் படுத்திக்
கொண்டேன்.....//

உங்களை நண்பனாகப் பெற அவற்றிற்கு இப்போதுதான் கொடுத்து வைத்திருக்கிறது.

உங்கள் சந்தோஷத்தில் எல்லோரும் பங்கு பெருகிறோம். வாழ்த்துக்கள் நண்பரே!

cheena (சீனா) said...

அந்தோணி

மறு பிறவி கொடுத்த இறைவனுக்கு நன்றி

வாழ்வினைத் தொடங்கு - எல்லாம் நல்ல படி நடக்கும்

நல்வாழ்த்துகள்

SurveySan said...

good one.


pls write about this.
//INVENTIONS
In 1998, I Invented a new sound system by Combining Music fundamentality & Electronics(similar & advanced than Dts).
You can feel music Dancing around you according to the Composing in my sound system.//

S.Muruganandam said...

அருமையான கவிதை, வாழ்த்துக்கள் அந்தோணி முத்து.

Mohan Balki - YoZenMind Counseling Psychologist, Chennai, India. said...

Ungal kavidhai migavum azhagu!
melliya unarvugalai sirappaaga velippaduthi aagaaya malaiyil azhiyaamal sedhukki irukkireergal!

Kalam kanindhaal ungalai sandhippean!

Innum...innum...ezhudhungal nanbare!

YozenBalki.Blogspot.com
Chennai
Mobile:98400 42904

Infolinks In Text Ads

LinkWithin

Related Posts with Thumbnails

Karnaa Full Video

Title:கர்ணன் karnan (திரைப்படம்) (Tamil film...

Desc:

Download here

எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....

A Letter to God...!



Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,

"1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.

I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.