GIVE & RECEIVE FULL

Custom Search for Positive Anthony Muthu
Custom Search

Tuesday, December 9, 2008

இரண்டு தவளைகளின் கதை




இரண்டு தவளைகள், தவறிப் போய் பால் இருந்த சட்டியில் விழுந்துவிட்டன.

இரண்டுமே வெளியில் வர எம்பி எம்பி குத்தித்தன.

ஐயோ... பாவம்...!

அவை எம்பும் உயரத்தை விட அந்த சட்டியின் வாய் இன்னும் 5 செ. மீ. அளவாவது உயரம்.

ஒரு தவளை நம்பிக்கையிழந்தது.

இனிமேல் நாம் வெளி உலகத்தையே பார்க்க முடியாது. இங்கேயே கிடந்து சாக வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டது.

கொஞ்சம் கொஞ்சமாய் சாவதை விட, இப்போதே செத்து விடலாம்... என்று பாலுக்குள்ளேயே மூச்சடக்கி தற்கொலை செய்து கொண்டது.

இன்னொரு தவளையோ.... தன் மீதும்... எதிர் காலத்தின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டது.

"இப்போது வேண்டுமானால் நான் வெளியில் போக முடியாமல் போகலாம்....
ஆனால் விரைவில்...
நான் இதிலிருந்து மீள்வேன்...!"

என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது.

எம்பிக் குதிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

விடாமல் முயற்சி செய்து கொண்டே... (எம்பி குதித்தபடியே) இருந்தது.

கொஞ்ச நேரம் ஆனது.

இப்போது...
பாலுக்குள்ளிருந்து வெண்ணிறமாக கொழ கொழ வென்று ஏதோ வெளிப்படத்தொடங்கியது.

அது வேறொன்றிமில்லை. பாலைத் தொடர்ந்து கடைவது போல குதித்துக் கொண்டிருந்ததால் வெளியான வெண்ணை.

இப்போது வெண்ணையெல்லாம் திரண்டு....
7 செ. மீ. உயரத்திற்கு ஒரு கட்டியாக திரண்டது.

நமது தவளை அந்த வெண்ணைத் திரளின் மேல் ஏறி அமர்ந்தது.

ஒரே "ஜம்ப்"தான்.

வெளி உலகிற்கு வந்து விட்டது.

--------------------------------------------------------------------------------------

இந்தக் கதை நமக்கு உணர்த்துவது....

1. வாழ்வின் எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை இழக்கக் கூடாது.

2. விடா முயற்சி.


முன்பெல்லாம் எனக்கு நானே இப்படி சொல்லிக் கொள்வேன்.

"இன்றைக்கு வேண்டுமானால் நான் இப்படி துன்பத்தில் இருக்கலாம்.

ஆனால் என்றைக்குமே இப்படியே இருக்கப் போவதில்லை."


"நல்லா இருக்க எங்களாலேயே ஒண்ணும் முடியல... நீ என்னத்தை சாதிச்சுடப் போற!" என்று என்னிடம் சிலர் சொல்வார்கள்.

நான் சொல்வேன்....

"இப்ப வேணா நான் தோத்துப் போகலாம்... ஆனா எப்பவுமே தோற்க மாட்டேன்.
ஆகட்டுமே... எவ்வளவு காலம்தான் ஆகட்டுமே?


உயிர் பிரியும்... அந்த வினாடி வரையிலும்... நான் நம்பிக்கையோடேயே இருப்பேன்.

அட! 10 வருஷம் ஆகட்டும். 20... 30... 50 வருஷம் கூட ஆகிவிட்டுப் போகிறது.

நான் எனது நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கும் வேளையில் எனக்கே தெரியாமல் என் உயிர் பிரிந்தாலும் கவலை இல்லை.

எனது நம்பிக்கையை ஒரு போதும் விட மாட்டேன்.


நம்பிக்கை! விடாமுயற்சி! காத்திருப்பு!


இதுதான் வாழ்வின் தத்துவம்.


----------------------------------------------------------------------------------------------------
மேற்கூறிய தவளைக் கதை...
எனது பதினாறுகளில்... நான் தேடித் தேடிப் படித்த...
எனக்கு நம்பிக்கை உரமூட்டிய எனது தன்னம்பிக்கை ஆசான்...
"திரு. எம். எஸ். உதயமூர்த்தி" அவர்களின் "எண்ணங்கள்" புத்தகத்திலிருந்து....
இன்னும் பசுமையாய் நினைவில் இருந்த கதை.

3 comments:

அன்புடன் அருணா said...

//"இப்ப வேணா நான் தோத்துப் போகலாம்... ஆனா எப்பவுமே தோற்க மாட்டேன்.//

இதுதான் உண்மை....நீங்க ஜெயிக்க ஆரம்பித்துவிட்டீர்கள்...அருமையான பதிவு அந்தோணி முத்து.....படித்தவுடன் உடம்பில் புது ரத்தம் பாய்ந்தது போல் ஒரு உணர்வு.
அன்புடன் அருணா

பி.சேர்முக பாண்டியன் said...

மிக அருமையான கதை .நல்ல கருத்து. உங்களுடை ய முன்னேற்றமும் அப்படித்தானே! --- ப.சேர்முக பாண்டியன்

Anonymous said...

மிக அருமையான கதை .நல்ல கருத்து. உங்களுடை ய முன்னேற்றமும் அப்படித்தானே! --- ப.சேர்முக பாண்டியன்

Infolinks In Text Ads

LinkWithin

Related Posts with Thumbnails

Karnaa Full Video

Title:கர்ணன் karnan (திரைப்படம்) (Tamil film...

Desc:

Download here

எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....

A Letter to God...!



Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,

"1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.

I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.