Monday, November 16, 2009
Sunday, November 1, 2009
வித்தியாசமான வீடியோ...!
வீடியோ பாத்து முடிச்சுட்டீங்களா?
முடிவில் எதிர்பாராத 'O'Henry twist அற்புதம்.
இது குறித்து என் மன நிலையை மேலே இந்த வலைப்பூ தலைப்புக்கு அடுத்தபடியான "விளக்கத்தில்" எழுதியுள்ளேன். (Description of this Blog)
கீழே படம் பாருங்கள் புரியும்.
ஆம்..!
புறநானூற்றில் எனக்கு மிகப் பிடித்த வரிகள் அவை.
"ஈயென இரத்தல் இழிந்தன்று- அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று"
"கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று- அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உய்ர்ந்தன்று!"
இந்த வரிகளுக்கு விஷுவல் பொழிப்புரை எழுதிய இந்தக் குறும்படமெடுத்தவருக்கு ஆயிரம் கோடி பாராட்டுக்கள்.
இங்கே....!
மிக நேர்மையுடன் என் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதுதான் நியாயத்திலும் மிகுந்த நியாயம்.
ஆம்..!
ஈயென இறந்திருக்கிறேன்.
ஈயேன் என இழிந்திருக்கிறேன்.
கொள்ளெனக் கொடுத்திருக்கிறேன்.
கொள்ளேன் என மறுத்திருக்கிறேன்.
"இறந்ததையும் இழிந்ததையும்" நினைக்கையில் வெறுமனே கையாலாகாத அழுகையும், மனம் முழுக்க வலியும் வேதனையும் மட்டுமே மிஞ்சுகிறது.
"இங்கே "என் இனிய கர்ணா-வில் நான் எழுதியுள்ளதைப் போல்""
இப்படித்தான் சொல்லி என்னைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
"என் இல்லாமையும், இயலாமையும்...
மட்டும் எனக்கு ஏற்படாமல் போயிருந்தால்..,.
இந்தக் காயங்களும் எனக்கு இல்லாமல் போயிருக்கும்."
என்னை நானே திரும்பிப் பார்த்துக் கொள்ள வைத்த வீடியோ! :-)
"வீடியோ கண்ட இடத்துக்கு நன்றி: "
பி. கு. 2: இப்போது முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ள, அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகி மென்பொருளுக்கு"இங்கே சொடுக்கவும்..."
Sunday, October 4, 2009
தோண்டப்பட்ட சிறுவயல்...!
அப்போது நீ..., வயல்களுக்கு நடுவில் சிறு வயலாக வாழ்ந்திருந்தாய்.
உன்னைச் சுற்றியுள்ள பெருவயல்கள் உன்னை மதிக்காத போதும், அவற்றோடு கதைப்பதில் உனக்கு மிக ஆனந்தம்.
ஒரு நாள் வயல்களின் சொந்தக்காரர் சில ஆட்களுடன் வந்தார்.
மிகச் சரியாக உன்னைத் தேர்ந்தெடுத்து உன்னில் பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர்.
உனக்கோ மகா துக்கம்.
உயிர் போகும் வலி.
பக்கத்துப் பெருவயல்கள், தமக்குள் பேசிக்கொண்டும், புன்னகைத்துக்கொண்டுமிருந்தன.
உன் உடலைக் குத்திக் கிழித்தபடி, காயத்தை ஆழமாக்கிக் கொண்டே, உனக்கு மிக வலியைத் தந்தார்கள் ஆட்கள்.
நீயோ கடைசி முயற்சியாக இறைவனை நோக்கி முறையிட்டாய்.
இறைவா...! என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏனிந்த நிலை? கதறினாய்.
கடவுள் சொன்னார்.
"சற்று பொறு..!"
உன் துக்கமும் துயரமும் அதிகமாகி வலியில் நீ பீறிட்டு அழத் துவங்கினாய்.
அற்புதம் நிகழ்ந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------
சில நாள் கழித்து இறைவன் உன்னோடு பேசினார்.
"இப்போது எப்படி இருக்கிறாய்?"
"சந்தோஷமாயிருக்கிறேன்.
என்னைச் சுற்றி உள்ள வயல்கள் இப்போது என்றும் பசுமையாய் செழிக்கின்றன.
என்னைச் சுற்றிலும் சோலைகள்.
நான் கொடுத்து வைத்த பிறவி.
இப்போது நான் பழைய சிறுவயல் அல்ல.
ஆழ்கிணறு!
என்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் செழிக்க...
நான் துன்பப்பட்டது எனக்குக் கிடைத்த மாவரம்."
கடவுள் புன்னகைத்தார்!
இப்போதும் நீ அழுது கொண்டிருக்கிறாய்!
ஆனந்தத்தில்.
ஆனந்த அழுகையின் பிரவாகத்தில் சுற்றிலும் சந்தோஷமும் நம்பிக்கையும் விளைந்து கொண்டே போகிறது.
இது நிரந்தரம்.
Posted by +Ve Anthony Muthu at 11:27 PM 6 comments Links to this post
Labels: சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, மனோசக்தி, வெற்றியடைய
A Letter to God...!
Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.
I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.
You had fulfilled, "All of my Essential 3 needs,
"1) Online Job (With a Salary of 3000 Rs.)
2) New Laptop.
3) Powered wheel Chair.
I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.
PLEASE MAKE ME POWERFUL.
PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.
PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.
Thank you Soooo MMMuchhh.
Your's Same Faithfully & Especially Beloved Son
Anthony Muthu.
