GIVE & RECEIVE FULL

Custom Search for Positive Anthony Muthu
Custom Search

Sunday, March 29, 2009

தயவுசெய்து இந்த வீடியோக் காட்சியை மட்டும் பாத்துடாதீங்க பாஸ்..!



வேணாம் பாஸ்..!

சொன்னாக் கேளுங்க...!

இதை தயவு செஞ்சி பாக்க வேண்டாம்...!

சொன்னாக் கேக்க மாட்டீங்க..!


சரி..! OK..! பாத்துக்கங்க..!


நாம சின்ன வயசுல இருந்தே, "இதைச் செய்ய்யாதே..! அதைச் செய்ய்யாதேன்னு..!"
"இங்க போகாதே..! அங்க போகாதேன்னு..!"
எப்படியெல்லாம்... எதிர் மறைக் (Negative) கட்டளைகளால் சூழப்படுகிறோம்...

அதை நாம எப்படி எதிர்கொள்கிறோம்ங்கறதை விளக்குவதற்க்காக மனோதத்துவ நிபுணர் "டெரன் பிரவுன்"- ங்கறவரு நடத்திக் காட்டிய பரிசோதனையின் வீடியோக் காட்சிதான் அது.

அந்த சின்னப்பசங்க கிட்ட ஒரு பெட்டியக் காட்டி...
இது்லக் கைய வச்சிராதீங்கன்னு... திரும்பத் திரும்ப சொன்னப்பறம் அவங்க என்ன பண்ணினாங்க...?

அப்புறம் என்ன நடந்திச்சு..?-ங்கறதைத்தான் நீங்க வீடியோவுல பாத்தீங்க.

சரி...! நான் ஒண்ணு சொல்றேன்.

"இப்ப நீங்க நீல நிறத்தைப் பத்தி நினைக்கக் கூடாது-ன்னு" நான் சொன்னா...

முதல்ல உங்க மனசுல நீல நிறத்தை நினைச்சுப் பாத்துட்டுத்தான், அதை நினைக்காம இருக்க முயறசி பண்ணுவீங்க.

சரியா..?

இன்னொரு உதாரணம்:


"நான சிகரெட் பிடிக்கக் கூடாது-ன்னு நீங்க நினைச்சீங்க-ன்னா...,"

முதல்ல உங்களுக்கு சிகரெட் நினைப்பு வந்து... அப்புறம்தான் அது வேணாம்-ன்னு நினைப்பீங்க.

இப்ப என்ன ஆகும்- ன்னா... ஆல்ரெடி உங்களுக்கு நீங்களே சிகரெட்டை நினைவுபடுத்திட்டீங்க.
அப்புறமென்ன..?

இன்னேரம் புகை பிடிக்கறதுக்கான முஸ்தீபுல இறங்கியிருப்பீங்க. (புகைப் பழக்கம் உள்ளவர்கள் மட்டும்.)

பைக்ல வெளிய கிளம்பறீங்க.
"இன்னிக்கு எந்த விபத்தும் நிகழக் கூடாதுன்னு" நினைச்சிட்டே போனீங்கன்னா...
கண்டிப்பா ஒரு சின்ன சிராய்ப்போடயாவது வீடு திரும்புவீங்க.

(ஏன்னா நீங்கதானே விபத்தை உங்க நினைப்புலயே கொண்டு போறீங்க?)

ஆக நம்ம மனசை...
நமக்கு எது தேவையோ... அதை நினைக்க பழக்கணும்.

தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை விலக்கி...
அங்கே நமக்குத் தேவையான நேர்மறைச் சிந்தனைகளை நிரப்ப வேண்டும்.

"இன்னிக்கி நான் பாதுகாப்பாய் பைக்ல போய் வருவேன்-ன்னு நினைச்சுட்டே வண்டிய எடுங்க."

Relace your Negative thoughts by Positive thoughts.


எப்படி...?

அடுத்த பதிவுல இன்னும் விரிவா பாப்போம்.


"நன்றி: இங்க இருந்துதாங்க பாஸ...,் இந்த வீடியோவைச்் சுட்டேன்.
ஹி..! ஹி..! ஹி..!"


பதிவப்படிச்சுட்டு நல்லா இருந்திச்சுன்னா... பின்னூட்டம் போட்டே ஆக வேண்டிய கட்டாயமில்லை பாஸ். ஜஸ்ட்... மேல தமிழ்மண கருவிப்பட்டைல கட்டைவிரல் மேல இருக்க இடத்துல ஒரு தடவை க்ளிக் பண்ணுங்க. போதும். (அதுக்காக பின்னூட்டமே வாணாம்-னு அர்த்தமில்லை. விரும்பினால் போடுங்க. சரியா..?)

"அப்படியே இங்க க்ளிக் பண்ணி இந்த பதிவையும் படிச்சுப்பாருங்களேன். (விரும்பினால்)"

11 comments:

அன்புடன் அருணா said...

ரொம்ப ஆழமான கருத்தை ரொம்ப எளிதாக விளக்கிருக்கீங்க...எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்குப்பா....
அன்புடன் அருணா

ஆ.ஞானசேகரன் said...

வாவ்வ்வ்வ்,..பின்னிடிங்க சகோதரே...

மாங்காய் அடிக்க சென்ற சம்பவம் ஒன்று... மாங்காய் அடிக்கும் போது பக்கத்தில் உள்ள சன்னல் கண்ணாடியை பதம் பார்க்ககூடாது என்றான் என் நண்பன்... என்மனதில் மாங்காயை விட சன்னல்ல் கண்ணாடிதான் பதிந்தது.. விளைவு////?????? கண்ணாடி தூள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்...

நல்ல பதிவு வாழ்த்துகள்

Tech Shankar said...

Good post

Anonymous said...

good post..

+Ve அந்தோணி முத்து said...

அன்புடன் அருணா said...

//ரொம்ப ஆழமான கருத்தை ரொம்ப எளிதாக விளக்கிருக்கீங்க...எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்குப்பா....
அன்புடன் அருணா//

ஆகா..! ஆகா..!
உங்களுக்கும் பிடிச்சிருச்சா..?

நன்ற்..!

+Ve அந்தோணி முத்து said...

ஆ.ஞானசேகரன் said...

//வாவ்வ்வ்வ்,..பின்னிடிங்க சகோதரே...

மாங்காய் அடிக்க சென்ற சம்பவம் ஒன்று... மாங்காய் அடிக்கும் போது பக்கத்தில் உள்ள சன்னல் கண்ணாடியை பதம் பார்க்ககூடாது என்றான் என் நண்பன்... என்மனதில் மாங்காயை விட சன்னல்ல் கண்ணாடிதான் பதிந்தது.. விளைவு////?????? கண்ணாடி தூள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்...

நல்ல பதிவு வாழ்த்துகள்//

நானும் இந்த மாதிரி எண்ணங்களால நெறைய்ய்யா அனுபவிச்சிட்டேன்.

ஒருகாலத்துல சுய இரக்கச் சாக்கடையில், முங்கித் திரியும் பன்றி போல் இருந்தது என் வாழ்வு.

இப்ப எதோ கொஞ்சம் இது பத்தி எழுதற அளவுக்கு முன்னேறியிருக்கேன்னா பாத்துக்கங்க பாஸ்.!

(டேய்..! அந்தோணி முத்து..! நீயாடா இது..!)

ஹி..! ஹி..!

+Ve அந்தோணி முத்து said...

தமிழ்நெஞ்சம் said...

//Good post//

நன்றி..! நன்றி...!

+Ve அந்தோணி முத்து said...

Anonymous said...

//good post..//

நன்றி..! நன்றி...!

+Ve அந்தோணி முத்து said...

King... said...

//good post...//


நன்றி..! நன்றி...!

Tech Shankar said...

கலக்குங்கோ

Suresh said...

Very good post i have become ur follower please keep posting ...

Infolinks In Text Ads

LinkWithin

Related Posts with Thumbnails

Karnaa Full Video

Title:கர்ணன் karnan (திரைப்படம்) (Tamil film...

Desc:

Download here

எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....

A Letter to God...!



Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,

"1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.

I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.